<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கவி நதி</title>
	<atom:link href="http://www.kavinathi.com/?feed=rss2" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.kavinathi.com</link>
	<description>தெளிந்த நதி நிற்பதில்லை உயிர் தேடும் பயணத்தில்;</description>
	<lastBuildDate>Thu, 01 Apr 2010 03:42:08 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.0.1</generator>
		<item>
		<title>நிசப்தமையம்</title>
		<link>http://www.kavinathi.com/?p=309</link>
		<comments>http://www.kavinathi.com/?p=309#comments</comments>
		<pubDate>Thu, 01 Apr 2010 03:36:20 +0000</pubDate>
		<dc:creator>நதியானவள்</dc:creator>
				<category><![CDATA[சிற்றலைகள்...]]></category>

		<guid isPermaLink="false">http://www.kavinathi.com/?p=309</guid>
		<description><![CDATA[பேசும் நிசப்த மோனத்தின் மையம் என் எதிரிருந்தது     தேநீரின் ஆவியும்  மூச்சின் சூடும்  நிறைத்தது போக  மெதுவாகப் பரந்து விரிந்து சென்றது   மொசைக்கற்களின் கறுப்புப் புள்ளிகள் கலைந்து பிரிந்தன எழும்பிப் பறந்து காற்றுடன் கதைத்தன     இறங்க முற்பட்டது ஓவியத்தில் குழந்தை அதட்டிய அம்மா சட்டம் பிரித்து சாடி ரோஜா பிடுங்கினாள்     வாக்குவாதப்பட்டுப் பின் உடன்படிக்கையாயின அலையத் தொடங்கியது வெளிச்சம் முகட்டில் செறிந்தது இருட்டு     மூலையில் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p class='fb-like'><iframe src='http://www.facebook.com/plugins/like.php?href=http://www.kavinathi.com/?p=309&amp;layout=button_count&amp;show_faces=true&amp;width=260&amp;action=like&amp;colorscheme=light' scrolling='no' frameborder='0' allowTransparency='true' style='border:none; overflow:hidden; width:260px; height:26px'></iframe></p><div>பேசும் நிசப்த<br />
மோனத்தின் மையம்<br />
என் எதிரிருந்தது</div>
<div><span> </span></div>
<div><span> </span></div>
<div><span>தேநீரின் ஆவியும் </span><br />
<span>மூச்சின் சூடும் </span><br />
<span>நிறைத்தது போக </span><br />
மெதுவாகப் பரந்து<br />
விரிந்து சென்றது</div>
<div>
<p> </p>
<p>மொசைக்கற்களின்<br />
கறுப்புப் புள்ளிகள்<br />
கலைந்து பிரிந்தன<br />
எழும்பிப் பறந்து<br />
காற்றுடன் கதைத்தன</p>
<p> </p>
<p> </p>
<p>இறங்க முற்பட்டது<br />
ஓவியத்தில் குழந்தை<br />
அதட்டிய அம்மா<br />
சட்டம் பிரித்து<br />
சாடி ரோஜா பிடுங்கினாள்</p>
<p> </p>
<p> </p>
<p>வாக்குவாதப்பட்டுப் பின்<br />
உடன்படிக்கையாயின<br />
அலையத் தொடங்கியது<br />
வெளிச்சம்<br />
முகட்டில் செறிந்தது<br />
இருட்டு</p>
<p> </p>
<p> </p>
<p>மூலையில் சிலந்தி<br />
நெய்தலில் இருந்தது<br />
எறும்புகள் இரண்டு<br />
காதலைப் பேசின</p>
<p> </p>
<p> </p>
<p>யன்னலின் கம்பிகள்<br />
நகர்ந்ததாகப்பட்டது<br />
தென்றலின் ஸ்பரிசத்தில்<br />
விலகியது சேலை</p>
<p> </p>
<p> </p>
<p>கண்ணிமைத்து விட்டிருந்தேன்<br />
நிசப்தத்தின் மையம்<br />
முற்றாகப் பிளந்தது<br />
<span>முதலில் </span>கறுப்புப்புள்ளிகள்<br />
கீழே விழுந்தன<br />
பேசா நிசப்தம்<br />
சூல் கொண்டது என்னை<br />
இன்னொன்றில் பிரசவிக்க</div>
<fb:share-button href="http://www.kavinathi.com/?p=309" type="button"></fb:share-button>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.kavinathi.com/?feed=rss2&amp;p=309</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஒரே தொழில்</title>
		<link>http://www.kavinathi.com/?p=305</link>
		<comments>http://www.kavinathi.com/?p=305#comments</comments>
		<pubDate>Sat, 27 Mar 2010 22:48:40 +0000</pubDate>
		<dc:creator>நதியானவள்</dc:creator>
				<category><![CDATA[சிற்றலைகள்...]]></category>

		<guid isPermaLink="false">http://www.kavinathi.com/?p=305</guid>
		<description><![CDATA[குழைந்த இருட்டு குதப்பித் துப்பிய வெட்கங்களைத் தேடத் தொடங்கினாள் கழற்றி எறிந்த சட்டையுடன் ஒட்டியபடி கிடந்தது மனது கட்டில் சட்டத்தில் தொங்கவிட்ட உணர்ச்சிகள் வரிசைப்பட்டன     மல்லிகைகளால் இவனால் முழமிடப்பட்டிருந்த முத்தங்கள் இன்னும் மீதமிருந்தன கனகாம்பரத்துக்காக அங்கே அவனால் அளக்கப்படும் யாருக்குத் தெரியும் நாளை முத்தச் சுரப்புகள் சேலையுடன் உரியப்படலாம்     அவளின் உதட்டுச் சாயம் அழித்து பூவிதழ் தட்டியவனின் சட்டையின் கட்டங்களிலிருந்து எம்பிக்கொண்டிருந்தாள்  அவன் மனைவி அவளின் சாளரத் தாழ் கயிற்றினால் கட்டப்பட்டிருந்தது [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p class='fb-like'><iframe src='http://www.facebook.com/plugins/like.php?href=http://www.kavinathi.com/?p=305&amp;layout=button_count&amp;show_faces=true&amp;width=260&amp;action=like&amp;colorscheme=light' scrolling='no' frameborder='0' allowTransparency='true' style='border:none; overflow:hidden; width:260px; height:26px'></iframe></p><div>குழைந்த இருட்டு<br />
குதப்பித் துப்பிய வெட்கங்களைத்<br />
தேடத் தொடங்கினாள்<br />
கழற்றி எறிந்த சட்டையுடன்<br />
ஒட்டியபடி கிடந்தது மனது<br />
கட்டில் சட்டத்தில் தொங்கவிட்ட<br />
உணர்ச்சிகள் வரிசைப்பட்டன</div>
<div>
<p> </p>
<p> </p>
<p>மல்லிகைகளால் இவனால்<br />
முழமிடப்பட்டிருந்த முத்தங்கள்<br />
இன்னும் மீதமிருந்தன<br />
கனகாம்பரத்துக்காக அங்கே<br />
அவனால் அளக்கப்படும்<br />
யாருக்குத் தெரியும்<br />
நாளை முத்தச் சுரப்புகள்<br />
சேலையுடன் உரியப்படலாம்</p></div>
<div>
<p> </p>
<p> </p>
<p>அவளின் உதட்டுச் சாயம் அழித்து<br />
பூவிதழ் தட்டியவனின்<br />
சட்டையின் கட்டங்களிலிருந்து<br />
<span>எம்பிக்கொண்டிருந்தாள் </span><br />
அவன் மனைவி<br />
அவளின் சாளரத் தாழ்<br />
கயிற்றினால் கட்டப்பட்டிருந்தது</div>
<div>
<p><span> </span></p>
<p><span> </span></p>
<p><span>தலையணை தடவி </span><br />
<span><span>தாள்கள் </span></span>எண்ணியவளின்<br />
<span>தேயாத சுவடுகள் </span><br />
<span>தெருவில் பதிந்தன </span><br />
அடையாள வேட்கை<br />
அவளை மட்டும் வேசியாக்கியது</div>
<div>
<p> </p>
<p> </p>
<p>விடுதலையாகிய மனைவியுடன்<br />
அதே தொழிலிருந்த<br />
அவனைச் சுட்ட<br />
வார்த்தைகள் தேடுவதை விடுத்து<br />
புணர்தலின் அவசரத்தில்<br />
நிர்வாணப்பட்டிருந்தது<br />
இந்த சமூகம்</p></div>
<fb:share-button href="http://www.kavinathi.com/?p=305" type="button"></fb:share-button>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.kavinathi.com/?feed=rss2&amp;p=305</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>நிதானித்த பால்யம்</title>
		<link>http://www.kavinathi.com/?p=296</link>
		<comments>http://www.kavinathi.com/?p=296#comments</comments>
		<pubDate>Thu, 25 Feb 2010 16:03:56 +0000</pubDate>
		<dc:creator>நதியானவள்</dc:creator>
				<category><![CDATA[சிற்றலைகள்...]]></category>

		<guid isPermaLink="false">http://www.kavinathi.com/?p=296</guid>
		<description><![CDATA[பரட்டைத் தலையுடன் படலைகளில் காய்ந்ததிலும் எச்சில் மிட்டாய்களுக்காய் ஏவல்கள் செய்ததிலும் சட்டையின் பூக்கள் நிறம் ஒட்டியிருக்கும் ஊஞ்சலிலும் மண் சோறு தின்ன வந்த அணில்களும் புலுனிகளும் தீரத் தீரப் பேசிப் பின்னும் எஞ்சியிருந்த பொழுதுகளிலும் மாம்பூக்கள் ஆசிர்வதித்த மஞ்சள் மாலைகளிலும்     நிதானமான நிமிடங்களுடன் நீட்சித்துக் கிடந்தன பால்யத்தின் நாட்கள் தெருவின் புழுதிக்குள் கொலுசின் மணிகளோடு கழன்றனவாகின கனவுகள் நான் படிப்பிக்காததால் தோற்றிருந்தது நித்யகல்யாணி தேற்றியபடி நாய்க்குட்டி     பனிகளுக்குள் பூத்திருந்தது வாடாமல்லி வாசமற்று [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p class='fb-like'><iframe src='http://www.facebook.com/plugins/like.php?href=http://www.kavinathi.com/?p=296&amp;layout=button_count&amp;show_faces=true&amp;width=260&amp;action=like&amp;colorscheme=light' scrolling='no' frameborder='0' allowTransparency='true' style='border:none; overflow:hidden; width:260px; height:26px'></iframe></p><div>பரட்டைத் தலையுடன்<br />
படலைகளில் காய்ந்ததிலும்<br />
எச்சில் மிட்டாய்களுக்காய்<br />
ஏவல்கள் செய்ததிலும்<br />
சட்டையின் பூக்கள் நிறம்<br />
ஒட்டியிருக்கும் ஊஞ்சலிலும்</div>
<div>
<p>மண் சோறு தின்ன வந்த<br />
அணில்களும் புலுனிகளும்<br />
தீரத் தீரப் பேசிப் பின்னும்<br />
எஞ்சியிருந்த பொழுதுகளிலும்<br />
மாம்பூக்கள் ஆசிர்வதித்த<br />
மஞ்சள் மாலைகளிலும்</p>
<p> </p>
<p> </p>
<p>நிதானமான நிமிடங்களுடன்<br />
நீட்சித்துக் கிடந்தன<br />
பால்யத்தின் நாட்கள்<br />
தெருவின் புழுதிக்குள்<br />
கொலுசின் மணிகளோடு<br />
கழன்றனவாகின கனவுகள்<br />
நான் படிப்பிக்காததால்<br />
தோற்றிருந்தது நித்யகல்யாணி<br />
தேற்றியபடி நாய்க்குட்டி</p></div>
<div>
<p> </p>
<p> </p>
<p>பனிகளுக்குள் பூத்திருந்தது<br />
வாடாமல்லி வாசமற்று<br />
ஈச்சம் பழத்தின் நிறம்<br />
மறந்துவிட்டிருந்தது<br />
இன்று காலையில்<br />
நிதானித்தே போயிருந்தன<br />
பால்யத்தின் நாட்கள்</p></div>
<fb:share-button href="http://www.kavinathi.com/?p=296" type="button"></fb:share-button>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.kavinathi.com/?feed=rss2&amp;p=296</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>சுதந்திரப்பட்ட ஆறாவது</title>
		<link>http://www.kavinathi.com/?p=285</link>
		<comments>http://www.kavinathi.com/?p=285#comments</comments>
		<pubDate>Fri, 12 Feb 2010 04:35:52 +0000</pubDate>
		<dc:creator>நதியானவள்</dc:creator>
				<category><![CDATA[சிற்றலைகள்...]]></category>

		<guid isPermaLink="false">http://www.kavinathi.com/?p=285</guid>
		<description><![CDATA[அவன் &#8220;பைத்தியம்&#8221; அவனது ஆறாவது சுதந்திரப்பட்டது அவனது உலகத்தை ஆறாவதுகள் சிருஷ்டித்தன     நாகரீகம் பேசின உடைகள் மொழி பரந்திருந்தது அர்த்தங்கள் விளங்காததாயும் அவன் நவீன கவிதைகளை காற்றில் கிறுக்கினான் குடித்தான் மிகுதியை சுவாசித்தான் ஒற்றைச் செருப்பினடி ஒதுங்கிக் கிடந்தது உலகம்     &#8220;சாப்பிட்டாயா&#8221; வினவ என் வாசனைகள் தடுத்தன ஆடை உள்ளுடம்பு அதனுள் ஒரு உடம்பு நிரம்பாத பள்ளங்களுடன் மணக்கத் தொடங்கியிருந்தது மறுதலிக்கப்பட்ட ஆத்மா அவனுள் ஒளிர்வதாகப்பட்டது &#8220;பிரம்மை&#8221; அவன் சாக்கடை   [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p class='fb-like'><iframe src='http://www.facebook.com/plugins/like.php?href=http://www.kavinathi.com/?p=285&amp;layout=button_count&amp;show_faces=true&amp;width=260&amp;action=like&amp;colorscheme=light' scrolling='no' frameborder='0' allowTransparency='true' style='border:none; overflow:hidden; width:260px; height:26px'></iframe></p><p>அவன்<br />
&#8220;பைத்தியம்&#8221;<br />
அவனது ஆறாவது<br />
சுதந்திரப்பட்டது<br />
அவனது உலகத்தை<br />
ஆறாவதுகள் சிருஷ்டித்தன</p>
<p> </p>
<p> </p>
<p>நாகரீகம் பேசின<br />
உடைகள்<br />
மொழி பரந்திருந்தது<br />
அர்த்தங்கள் விளங்காததாயும்<br />
அவன் நவீன கவிதைகளை<br />
காற்றில் கிறுக்கினான்<br />
குடித்தான்<br />
மிகுதியை சுவாசித்தான்<br />
ஒற்றைச் செருப்பினடி<br />
ஒதுங்கிக் கிடந்தது<br />
உலகம்</p>
<p> </p>
<p> </p>
<p>&#8220;சாப்பிட்டாயா&#8221; வினவ<br />
என் வாசனைகள் தடுத்தன<br />
ஆடை உள்ளுடம்பு<br />
அதனுள் ஒரு உடம்பு<br />
நிரம்பாத பள்ளங்களுடன்<br />
மணக்கத் தொடங்கியிருந்தது<br />
மறுதலிக்கப்பட்ட ஆத்மா<br />
அவனுள் ஒளிர்வதாகப்பட்டது<br />
&#8220;பிரம்மை&#8221;<br />
அவன் சாக்கடை</p>
<p> </p>
<p> </p>
<p>ஆலயம் திறந்தது<br />
எனக்காக மட்டும்<br />
யாசித்த அவனுக்கும்<br />
யாசிக்காத நாய்க்கும்<br />
பிச்சை மறுத்து உள்ளேகி<br />
பிச்சை கேட்டு மீண்டு<br />
நானும் அவனும்<br />
ஒரே தெருவில் நின்றோம்</p>
<p> </p>
<p> </p>
<p>அவனது ஆறாவது<br />
சுதந்திரப்பட்டது<br />
நகைத்தது எனதை<br />
அது சிறையிலிருந்தது</p>
<p> </p>
<p> </p>
<p>எனக்கும் சிரிப்பு வந்தது<br />
என் இதழ் பிறழ்ந்து<br />
இம்மியாகப் பிரிந்து<br />
யாரும் கவனிக்கவில்லை<br />
என்னிடம் காரணம் இல்லை</p>
<p> </p>
<p> </p>
<p>பார்த்துக் கொண்டிருந்தார்கள்<br />
அவனை<br />
அதிசயங்கள் அந்நியமாக்கப்படுகின்றன<br />
ஆறாவதுகளின் காரணங்களினால்</p>
<p> </p>
<p> </p>
<p>அவன் பேசத் தொடங்கியிருந்தான்<br />
காரணமில்லாமல்<br />
நிறைய சிரித்தான்<br />
காரியத்துடன்<br />
என்னைப் பார்த்தும்<br />
இல்லை<br />
அது &#8220;பிரம்மை&#8221;<br />
அவன் பைத்தியம்</p>
<fb:share-button href="http://www.kavinathi.com/?p=285" type="button"></fb:share-button>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.kavinathi.com/?feed=rss2&amp;p=285</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>இரு கவிதை&#8230;ஒரு காதல்&#8230;</title>
		<link>http://www.kavinathi.com/?p=278</link>
		<comments>http://www.kavinathi.com/?p=278#comments</comments>
		<pubDate>Fri, 05 Feb 2010 05:46:07 +0000</pubDate>
		<dc:creator>நதியானவள்</dc:creator>
				<category><![CDATA[சிற்றலைகள்...]]></category>

		<guid isPermaLink="false">http://www.kavinathi.com/?p=278</guid>
		<description><![CDATA[1. இரு நிழல்கள் ஒன்று இவள் சற்றிறங்கிய மேகம் தூறிக் கொண்டிருந்தது கூடவே மரமும் கரைந்து ஒன்றாகி ஒரு நிழல் காதல்       2. சேர நின்றது மழை புன்னகைத்தாய் பூத் தொடுத்தாய் மௌனமாக்கப்பட்ட இதழ் மொழிகளற்ற பிரக்ஞை எட்டக் கிடந்தது காமம் தொடக் கடந்தது காதல்]]></description>
			<content:encoded><![CDATA[<p class='fb-like'><iframe src='http://www.facebook.com/plugins/like.php?href=http://www.kavinathi.com/?p=278&amp;layout=button_count&amp;show_faces=true&amp;width=260&amp;action=like&amp;colorscheme=light' scrolling='no' frameborder='0' allowTransparency='true' style='border:none; overflow:hidden; width:260px; height:26px'></iframe></p><div>1.</div>
<div>இரு நிழல்கள்<br />
ஒன்று இவள்<br />
சற்றிறங்கிய மேகம்<br />
தூறிக் கொண்டிருந்தது<br />
கூடவே மரமும்<br />
கரைந்து ஒன்றாகி<br />
ஒரு நிழல்<br />
காதல்</div>
<div>
<p> </p>
<p> </p>
<p> </p>
<p>2.<br />
சேர நின்றது<br />
மழை<br />
புன்னகைத்தாய்<br />
பூத் தொடுத்தாய்<br />
மௌனமாக்கப்பட்ட இதழ்<br />
மொழிகளற்ற பிரக்ஞை<br />
எட்டக் கிடந்தது<br />
காமம்<br />
தொடக் கடந்தது<br />
காதல்</p></div>
<fb:share-button href="http://www.kavinathi.com/?p=278" type="button"></fb:share-button>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.kavinathi.com/?feed=rss2&amp;p=278</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பெயர்</title>
		<link>http://www.kavinathi.com/?p=276</link>
		<comments>http://www.kavinathi.com/?p=276#comments</comments>
		<pubDate>Fri, 05 Feb 2010 05:43:38 +0000</pubDate>
		<dc:creator>நதியானவள்</dc:creator>
				<category><![CDATA[சிற்றலைகள்...]]></category>

		<guid isPermaLink="false">http://www.kavinathi.com/?p=276</guid>
		<description><![CDATA[என் பெயர் இப்படி இருந்திருக்க வேண்டாம்     பெயர் இயல்புகளின் கலவை இருப்பின் அடையாளம் உருவ அருவங்களின் திரட்டு என்றோ அழியும் உடலின் அழியாத முகவரி உலகம் என்னைச் சுட்ட நானே வெட்டிக் கொடுத்த விரல் நானே மறந்த சுயம்     இது எப்படி? எங்கிருந்து இயங்குகிறது? உச்சரிப்புக்குத் திரும்புவது மனமா? உடலா? நச்சரிப்புக்க்ளின் தீர்ப்பில் தவணை முறை முடிவானதா? இயங்க மறுக்கும் இரண்டுக்கும் ஏன் ஒரே தலைப்பு?     இப்போது திரும்பியது [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p class='fb-like'><iframe src='http://www.facebook.com/plugins/like.php?href=http://www.kavinathi.com/?p=276&amp;layout=button_count&amp;show_faces=true&amp;width=260&amp;action=like&amp;colorscheme=light' scrolling='no' frameborder='0' allowTransparency='true' style='border:none; overflow:hidden; width:260px; height:26px'></iframe></p><div>என் பெயர் இப்படி<br />
இருந்திருக்க வேண்டாம்</div>
<div>
<p> </p>
<p> </p>
<p>பெயர்<br />
இயல்புகளின் கலவை<br />
இருப்பின் அடையாளம்<br />
உருவ அருவங்களின் திரட்டு<br />
என்றோ அழியும் உடலின்<br />
அழியாத முகவரி<br />
உலகம் என்னைச் சுட்ட<br />
நானே வெட்டிக் கொடுத்த விரல்<br />
நானே மறந்த சுயம்</p></div>
<div>
<p> </p>
<p> </p>
<p>இது எப்படி?<br />
எங்கிருந்து இயங்குகிறது?<br />
உச்சரிப்புக்குத் திரும்புவது<br />
மனமா? உடலா?<br />
நச்சரிப்புக்க்ளின் தீர்ப்பில்<br />
தவணை முறை முடிவானதா?<br />
இயங்க மறுக்கும் இரண்டுக்கும்<br />
ஏன் ஒரே தலைப்பு?</p></div>
<div>
<p> </p>
<p> </p>
<p>இப்போது திரும்பியது<br />
ஏதாவதாக இருந்திருக்கலாம்<br />
ஒன்றாக<br />
நிமிர்ந்து பார்ப்பதில்லை<br />
என்று தலையும்<br />
நினைவில் வைப்பதில்லை<br />
என்று மனதும்<br />
என் உலகின் பிரசன்னம்<br />
விளங்காமல் போனதற்கும்<br />
இதற்கும் சம்பந்தம் இருக்கும்</p></div>
<div>
<p> </p>
<p> </p>
<p>என்னையே படித்திராதது<br />
என்னைப் பிரதிபலிப்பது<br />
அபத்தம்<br />
உங்கள் நினைவுகளில்<br />
என்னை மறந்திடுங்கள்<br />
அது நானில்லை<br />
என் பெயர்</p></div>
<div>
<p> </p>
<p> </p>
<p>பெயர்<br />
ஒரு பொய்<br />
உண்மையில்லாத உண்மை<br />
நீயில்லாத நீ<br />
உன்னைப் பற்றிய<br />
இயல்புகளைத் தாண்டி<br />
கற்பனைகள் செல்லாத தீவு<br />
அது உதவாது</p></div>
<div>
<p> </p>
<p> </p>
<p>நான் ஒளி<br />
உங்களைப் போல<br />
நீங்கள் என்னில்<br />
ஒளிர்வதைப் போல<br />
நான் பெயர்களை<br />
நினைவுபடுத்துவதில்லை<br />
அது தேவையில்லை<br />
<span>நான் </span>உன்னை அறிய</p>
<p> </p>
<p>என் பெயர்<br />
இப்படி இருந்திருக்க வேண்டாம்<br />
இருக்கவும் வேண்டாம்<br />
உனதும் அப்படியே</p></div>
<fb:share-button href="http://www.kavinathi.com/?p=276" type="button"></fb:share-button>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.kavinathi.com/?feed=rss2&amp;p=276</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கொஞ்சமாய் எனக்குமாய்!</title>
		<link>http://www.kavinathi.com/?p=259</link>
		<comments>http://www.kavinathi.com/?p=259#comments</comments>
		<pubDate>Thu, 31 Dec 2009 04:43:41 +0000</pubDate>
		<dc:creator>நதியானவள்</dc:creator>
				<category><![CDATA[சிற்றலைகள்...]]></category>

		<guid isPermaLink="false">http://www.kavinathi.com/?p=259</guid>
		<description><![CDATA[நிதர்சனங்களின் கற்பிதங்கள் நீளமாக இருக்கின்றன என்னால் ஒருமுறையேனும் வாசிக்க முடியாதனவாக   அந்த எண்ணற்றவைகளுக்குள் சிலவற்றைத்தான் விளக்கினாள் அம்மா இன்னமும் விளக்கிக் கொண்டே   நடை குறித்த கவலைகளிலும் உடை பற்றிய விவாதங்களிலும் அவளை முத்தமிடல் என்பது சாத்தியப்படுவதாக இல்லை புன்னகைத்தல் கொஞ்சம் சுலபமாக இருக்கிறது   நின்று நடக்க நினைப்பினும் அவளின் கைத்தடியின் நீளம் எட்டக் கூடியதாகவும் முட்ட மட்டும் முடிவதாகவும் அம்மா &#8220;பாரதி&#8221; படித்திருக்கவில்லை   களிமண் உட்செரித்த நீர் பின்னொரு நாளில் சிலையில் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p class='fb-like'><iframe src='http://www.facebook.com/plugins/like.php?href=http://www.kavinathi.com/?p=259&amp;layout=button_count&amp;show_faces=true&amp;width=260&amp;action=like&amp;colorscheme=light' scrolling='no' frameborder='0' allowTransparency='true' style='border:none; overflow:hidden; width:260px; height:26px'></iframe></p><p>நிதர்சனங்களின் கற்பிதங்கள்<br />
நீளமாக இருக்கின்றன<br />
என்னால் ஒருமுறையேனும்<br />
வாசிக்க முடியாதனவாக</p>
<p> </p>
<p>அந்த எண்ணற்றவைகளுக்குள்<br />
சிலவற்றைத்தான் விளக்கினாள் அம்மா<br />
இன்னமும் விளக்கிக் கொண்டே</p>
<p> </p>
<p>நடை குறித்த கவலைகளிலும்<br />
உடை பற்றிய விவாதங்களிலும்<br />
அவளை முத்தமிடல் என்பது<br />
சாத்தியப்படுவதாக இல்லை<br />
புன்னகைத்தல் கொஞ்சம்<br />
சுலபமாக இருக்கிறது</p>
<p> </p>
<p>நின்று நடக்க நினைப்பினும்<br />
அவளின் கைத்தடியின் நீளம்<br />
எட்டக் கூடியதாகவும்<br />
முட்ட மட்டும் முடிவதாகவும்<br />
அம்மா &#8220;<span>பாரதி&#8221;</span> படித்திருக்கவில்லை</p>
<p> </p>
<p>களிமண் உட்செரித்த நீர்<br />
பின்னொரு நாளில்<br />
சிலையில் வடிந்ததை<br />
நான் நம்பவில்லை<br />
அப்படியே இதையும்<br />
பாரதிக்காய்<br />
<span>கொஞ்சம் எனக்குமாய் </span></p>
<fb:share-button href="http://www.kavinathi.com/?p=259" type="button"></fb:share-button>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.kavinathi.com/?feed=rss2&amp;p=259</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>மறு தாக்கம்</title>
		<link>http://www.kavinathi.com/?p=256</link>
		<comments>http://www.kavinathi.com/?p=256#comments</comments>
		<pubDate>Fri, 18 Dec 2009 15:43:49 +0000</pubDate>
		<dc:creator>நதியானவள்</dc:creator>
				<category><![CDATA[வாழ்க்கையெனும் சாகரம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.kavinathi.com/?p=256</guid>
		<description><![CDATA[பிரட்டிப்போட்ட கரப்பானின் பிய்ந்து கொண்டிருக்கும் இறகுகளுக்குள்ளிருந்து எட்டிப் பார்க்கிறது மனது     சாத்தியப்பாடுகள் தரும் நிகழ்தகவுகளின் அன்புகளில் நெரிந்து வாழப் பழகுகிறது நசிந்த உயிர்     பெயர் எழுதப்படாத கண்ணீர் யாருக்குமே இல்லாமல் வழிய பிணமாகக் கனக்கிறது மௌனம்     ஆழ் மனதுக்குள் அலையும் உருவற்ற கருவைத் துரத்துவதொடு நிற்கிறது கவிதை   முற்றுப்புள்ளிகளற்றுப் போன இறுதிக் கவிதையின் முடிவாய் மிஞ்சி விளைகிறது காயம்   நிரந்தரமற்ற தூக்கத்தில் நெருடும் விடியலில் காற்றில் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p class='fb-like'><iframe src='http://www.facebook.com/plugins/like.php?href=http://www.kavinathi.com/?p=256&amp;layout=button_count&amp;show_faces=true&amp;width=260&amp;action=like&amp;colorscheme=light' scrolling='no' frameborder='0' allowTransparency='true' style='border:none; overflow:hidden; width:260px; height:26px'></iframe></p><p>பிரட்டிப்போட்ட கரப்பானின்<br />
பிய்ந்து கொண்டிருக்கும்<br />
இறகுகளுக்குள்ளிருந்து<br />
<span>எட்டிப் பார்க்கிறது மனது </span></p>
<p><span> </span></p>
<p><span> </span></p>
<p><span>சாத்தியப்பாடுகள் தரும் </span><br />
<span>நிகழ்தகவுகளின் அன்புகளில் </span><br />
<span>நெரிந்து வாழப் பழகுகிறது </span><br />
<span>நசிந்த உயிர் </span></p>
<p><span> </span></p>
<p><span> </span></p>
<p><span>பெயர் எழுதப்படாத கண்ணீர் </span><br />
<span>யாருக்குமே இல்லாமல் வழிய </span><br />
<span>பிணமாகக் கனக்கிறது </span><br />
<span>மௌனம் </span></p>
<p><span> </span></p>
<p><span> </span></p>
<p><span>ஆழ் மனதுக்குள் அலையும் </span><br />
<span>உருவற்ற கருவைத் </span><br />
<span>துரத்துவதொடு நிற்கிறது </span><br />
<span>கவிதை </span></p>
<p> </p>
<p><span>முற்றுப்புள்ளிகளற்றுப் போன </span><br />
இறுதிக் கவிதையின் முடிவாய்<br />
<span>மிஞ்சி விளைகிறது </span><br />
<span>காயம் </span></p>
<p> </p>
<p><span>நிரந்தரமற்ற தூக்கத்தில் </span><br />
<span>நெருடும் விடியலில்</span><br />
<span><span>காற்றில் </span>கீறுகிறது </span><br />
<span>பாச விரல் </span><br />
<span>இன்னொரு கரப்பானை </span><br />
<span>இறுகப் பிடித்தபடி </span></p>
<fb:share-button href="http://www.kavinathi.com/?p=256" type="button"></fb:share-button>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.kavinathi.com/?feed=rss2&amp;p=256</wfw:commentRss>
		<slash:comments>5</slash:comments>
		</item>
		<item>
		<title>நான் இருந்தேன்</title>
		<link>http://www.kavinathi.com/?p=246</link>
		<comments>http://www.kavinathi.com/?p=246#comments</comments>
		<pubDate>Sat, 12 Dec 2009 05:18:10 +0000</pubDate>
		<dc:creator>நதியானவள்</dc:creator>
				<category><![CDATA[சிற்றலைகள்...]]></category>

		<guid isPermaLink="false">http://www.kavinathi.com/?p=246</guid>
		<description><![CDATA[என் சோற்றுப் பருக்கைகளில் உன் பெயர் எழுதப்பட்டு அழிக்கப்பட்டிருக்கவேண்டும் உண்ணும் போது உன் நினைவு வந்தது   சாலை கடக்கையில் எனக்குக் கை காட்டிய சிறுவன் நீயாகத் தெரிந்தாய் அப்போது சிரிக்கவும் செய்தாய்   இலக்கற்று அலைந்த மேகத்தில் மழை கருக்கட்டியதை நான் ரசித்தபோது அந்த வெள்ளத்தில் நீ மூழ்கிக் கொண்டிருந்தாய்   இசை மீட்டி யாசித்த முதியவனின் வயலின் உன் ஏந்திய கைபோல வளைந்து தெரிந்தது அதன் இசையில் உன் குரல் இழைந்து இழைந்தது   [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p class='fb-like'><iframe src='http://www.facebook.com/plugins/like.php?href=http://www.kavinathi.com/?p=246&amp;layout=button_count&amp;show_faces=true&amp;width=260&amp;action=like&amp;colorscheme=light' scrolling='no' frameborder='0' allowTransparency='true' style='border:none; overflow:hidden; width:260px; height:26px'></iframe></p><p>என் சோற்றுப் பருக்கைகளில்<br />
உன் பெயர் எழுதப்பட்டு<br />
அழிக்கப்பட்டிருக்கவேண்டும்<br />
உண்ணும் போது<br />
உன் நினைவு வந்தது</p>
<p> </p>
<p>சாலை கடக்கையில் எனக்குக்<br />
கை காட்டிய சிறுவன்<br />
நீயாகத் தெரிந்தாய்<br />
அப்போது சிரிக்கவும் செய்தாய்</p>
<p> </p>
<p>இலக்கற்று அலைந்த மேகத்தில்<br />
மழை கருக்கட்டியதை<br />
<span>நான் </span>ரசித்தபோது<br />
அந்த வெள்ளத்தில்<br />
நீ மூழ்கிக் கொண்டிருந்தாய்</p>
<p> </p>
<p>இசை மீட்டி யாசித்த<br />
முதியவனின் வயலின்<br />
உன் ஏந்திய கைபோல<br />
வளைந்து தெரிந்தது<br />
அதன் இசையில் உன் குரல்<br />
இழைந்து இழைந்தது</p>
<p> </p>
<p>மார்புறிஞ்சிக் கண்ணயர்ந்த<br />
பிஞ்சொன்றைக் காண்கையிலே<br />
நீ தாயிழந்து நின்று<br />
ஓவென்று அலறியதும்</p>
<p> </p>
<p>கந்தல் உடை கட்டி<br />
காணமல் போன தந்தை தேடி<br />
விந்தி விந்தி நீ<br />
வீதிகளில் திரிந்ததுவும்</p>
<p> </p>
<p>பெருந் தெருக்கள் தாங்கும்<br />
நியோன் விளக்குகளில்<br />
நின் விழியின் கண்ணீர்<br />
தளும்பி வழிந்ததுவும்</p>
<p> </p>
<p>என் அடி மனதில் ஊறி<br />
ஊழித்தாண்டவம் ஆடி<br />
உலுக்கிப் போட்ட போதும்<br />
நீ என் நினைவில் இருந்தாய்</p>
<p> </p>
<p>இன்னொரு கவிதை பற்றி<br />
இந்தக் கவியூடு எண்ணி<br />
எழுதி முடிக்க முன்<br />
நீ மரித்திருந்தாய்<br />
<span>என் </span>மகவே<br />
<span>அப்போதும் நான் </span><br />
உன்னை நினைத்துக் கொண்டே இருந்தேன்<br />
நினைக்க மட்டுந்தான் இருந்தேன்</p>
<fb:share-button href="http://www.kavinathi.com/?p=246" type="button"></fb:share-button>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.kavinathi.com/?feed=rss2&amp;p=246</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>தண்ணீர்ப் பாம்புகள்</title>
		<link>http://www.kavinathi.com/?p=244</link>
		<comments>http://www.kavinathi.com/?p=244#comments</comments>
		<pubDate>Thu, 10 Dec 2009 20:09:43 +0000</pubDate>
		<dc:creator>நதியானவள்</dc:creator>
				<category><![CDATA[சிற்றலைகள்...]]></category>

		<guid isPermaLink="false">http://www.kavinathi.com/?p=244</guid>
		<description><![CDATA[ஆழ்கிணற்றுக்குள் யாரோ அள்ளிக் கொட்டிய இருட்டைக் கிள்ளிப் போடுவது பற்றியும் துலாவின் வாளி விழ எழும் பிலாக்கணத்தை நிறுத்துவது குறித்தும் தண்ணீர்ப் பாம்புகளை விடத் தவளைகள்தான் கவலைப்பட்டன   படிகளில் குறிக்கப்பட்ட தத்தம் பரம்பரைப் பெயர்கள் கொண்டே அவை நீதிமன்றக் கூடுகளில் அழைக்கப் பட்டிருந்தன   கோப்புகளுக்கும் வாய்தாக்களுக்கும் நீர்ப்பாம்புகள் தலையைக் காட்டின அதில் பல பெண்களாக இருந்தன சில வாற்பேத்தைகளும்   நிலாவின் நிழல் விழுந்த அரைகுறை இரவொன்றில் &#8220;பாம்புகள் படியேற&#8221; விதிகள் செய்யப்பட்டதாக தவளைகள் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p class='fb-like'><iframe src='http://www.facebook.com/plugins/like.php?href=http://www.kavinathi.com/?p=244&amp;layout=button_count&amp;show_faces=true&amp;width=260&amp;action=like&amp;colorscheme=light' scrolling='no' frameborder='0' allowTransparency='true' style='border:none; overflow:hidden; width:260px; height:26px'></iframe></p><p>ஆழ்கிணற்றுக்குள் யாரோ<br />
அள்ளிக் கொட்டிய இருட்டைக்<br />
கிள்ளிப் போடுவது பற்றியும்<br />
துலாவின் வாளி விழ எழும்<br />
பிலாக்கணத்தை நிறுத்துவது குறித்தும்<br />
தண்ணீர்ப் பாம்புகளை விடத்<br />
தவளைகள்தான் கவலைப்பட்டன</p>
<p> </p>
<p>படிகளில் குறிக்கப்பட்ட தத்தம்<br />
பரம்பரைப் பெயர்கள் கொண்டே அவை<br />
நீதிமன்றக் கூடுகளில்<br />
அழைக்கப் பட்டிருந்தன</p>
<p> </p>
<p>கோப்புகளுக்கும் வாய்தாக்களுக்கும்<br />
நீர்ப்பாம்புகள் தலையைக் காட்டின<br />
அதில் பல பெண்களாக இருந்தன<br />
சில வாற்பேத்தைகளும்</p>
<p> </p>
<p>நிலாவின் நிழல் விழுந்த<br />
அரைகுறை இரவொன்றில்<br />
&#8220;பாம்புகள் படியேற&#8221;<br />
விதிகள் செய்யப்பட்டதாக<br />
தவளைகள் கத்தின<br />
அடுத்த மழையில் செத்தன</p>
<p> </p>
<p>பின்வந்த அமாவாசையில்<br />
பிசைந்த இருட்டில் நின்று<br />
பாம்புகள் தீர்ப்பைப் படித்தன<br />
தங்களின் காதுகள்<br />
செவிடாகிப் போனதனால்<br />
காத்திருக்கத் தொடங்கின<br />
வாற்பேத்தைகளுக்காக<br />
இப்போதும்</p>
<fb:share-button href="http://www.kavinathi.com/?p=244" type="button"></fb:share-button>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.kavinathi.com/?feed=rss2&amp;p=244</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>
